Wednesday, December 9, 2015

காலவரையற்ற வேலைநிறுத்தம் - NJCA முடிவு

தேசிய  கூட்டு நடவடிக்கைக் குழு (ரயில்வே , இராணுவம்  மற்றும் மகாசம்மேளனம்) கூட்டம் 08.12.2015 அன்று டில்லியில் நடைபெற்றது .  கூட்டத்தில் ஏழாவது ஊதிய குழு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ( GDS , பகுதி நேர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்னைகள் உட்பட ) மீது விரிவான விவாதம் நடத்தப்பட்டு,  ஒரு பொதுவான கோரிக்கை சாசனம் இறுதி செய்யப்பட்டது .  அரசு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர் தரப்புடன்  ஒரு நியாயமான உடன்பாட்டிற்கு வரவில்லையெனில், மார்ச் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதெனவும்  NJCA முடிவு செய்துள்ளது.  இந்த முடிவு குறித்த கடிதம்  மற்றும்  கோரிக்கை
சாசனம்  விரைவில் அரசிடம் வழங்கப்படும்.  

No comments :

Post a Comment