Monday, December 5, 2011

BEST EFFORT- புது முயற்சி -பயிலரங்கு


மாநிலச் சங்க வரலாற்றில் இது வரை இல்லாத  ஒரு  புது  முயற்சி !

பொதுக் கூட்டம் , மாநாடு என்றெல்லாம் இல்லாத ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி !

வகுப்பு எடுப்போர் தவிர , கலந்து கொள்ளும்  அனைவருமே 
இங்கு ஒரு மாணவர் தான் என்பது  மகிழ்ச்சி !

இந்தப் பயிலரங்கு நிச்சயம்  நமக்குத் தருமே 
தொழிற்  சங்க விழிப்புணர்ச்சி !

பயில ரங்கின்  வலப் புறம்  50 அடி தூரத்தில் வற்றாத  காவிரி ஆறு .
இடப் புறம்  100  அடி தூரத்தில் ஆறு படை வீடு  முருகனின் கோயில் .
அதே சாலையில் 100  மீட்டர் தூரத்தில்  வரலாற்றுப் புகழ் 
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் . இது தான் நம் நிகழ்விடம்.

DELEGATE மட்டுமே கலந்து கொள்ளலாம் என்றில்லாமல் , அஞ்சல்  மூன்று
அஞ்சல் நான்கு , RMS மூன்று   RMS நான்கு   மற்றும்  இதர பகுதி  அஞ்சல் 
தோழர்களும்   PAID VISITOR  ஆக கலந்து கொள்ளலாம்  என்று  பெருவாரியானோர் கோரிக்கையை ஏற்று  முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

ஆனால் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பது முன்கூட்டியே 
தெரிந்தால் மட்டுமே  அவர்களுக்கான  தங்குமிடம்  மற்றும் உணவு 
இதர வசதிகளை  வரவேற்புக் குழுவால் செய்து கொடுக்க இயலும் என்பது 
மறுக்க முடியாத உண்மை அல்லவா ?  

இல்லையெனில் வசதி பற்றாக்குறை ஏற்பட்டு  மன வருத்தம்  ஏற்படும் 
அல்லவா ?  இதை தவிர்த்திடவே  இந்த அன்புக் கோரிக்கை. 
மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச்  செயலர்கள்
எதிர்வரும் வெள்ளி அன்றுக்குள் கலந்து கொள்வோர் எண்ணிக்கையை 
வரவேற்புக் குழு பொறுப்பாளர்களிடம்  கட்டாயம்  தெரிவித்திட 
வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.  இந்த வலைத்தளத்தை 
பார்க்கும் அன்புத் தோழர்கள் ,  இதனைப் பார்க்காத இதர பகுதித் 
தோழர்களுக்கும் அவசியம்  இந்த செய்தியை தெரிவித்திட அன்போடு 
வேண்டுகிறோம்.     
வாருங்கள்  நம் பயிற்சிப் பாசறை நோக்கி ! 
சேருங்கள்  உழைக்கும் 
கரங்களை தொழிலாளர் நலன் நோக்கி ! 

மீண்டும்  தெரியும்  நாம் 
எழுதப் போகும்  இயக்க வரலாறு !
நாளைய பொழுது  இனி 
நமதாகட்டும் ! 
 
 குறிப்பு :-
கீழே உள்ள  நிகழ்ச்சி நிரல்  அழைப்பு தமிழகம் முழுதும் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  , மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும்
இதர பொறுப்பாளர்களுக்கும் முன்னணித் தோழர்களுக்கும் அஞ்சல் மூலம்
அனுப்பப் பட்டுள்ளது .   



---   BY   JR  C/S  P3

1 comment :