Monday, December 19, 2011


         கருத்தரங்கம்

,
திருப்பூர் தலைமை அஞ்சலக வளாகத்தில்  18.12.2011  ஞாயிறு காலை 10.30 மணிக்கு தொடங்கிய   திருப்பூர் கோட்ட,மற்றும் மேட்டுபாளையம்  கிளை P3,P4  சங்கங்கள் நடத்திய வெற்றிகரமான   கருத்தரங்கம் மேற்கு மண்டலமே
வியக்கும் வண்ணம் நடைபெற்றது.

தோழர்:N.கோபாலகிருஷ்ணன் ,செயல் தலைவர் P3 புதுதில்லி 
(உலகமயமும் தொழிலாளர் வர்க்க கடமையும் )

தோழர் K.ராகவேந்திரன் முன்னாள் மாபொது செயலாளர்NFPE புதுதில்லி
(புதிய பென்சன் மசோதா =ஊழியர் நலனும் -உரிமை குரலும்)

தோழர்:   N. சுப்ரமணியன் , கோட்ட செயலர் P3 திருப்பூர்& ACS                                                                                   
 (தமிழக அஞ்சல் மூன்று,சவால்களும்-வருங்கால கடமைகளும்)

 தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் மாநில தலைவர் P3
(இளம் தோழர்களின் கடமையும் -பொறுப்பும்)

தோழர்:C.சந்திரசேகரன் செயல தலைவர்  NFPE  புதுதில்லி 
 
தோழர்:V,ராஜேந்திரன்முன்னாள் மாநில செயலர்
(தொழிற்சங்க ஜனநாயகம்)

தோழர்:S.கருணாநிதி  Member JCM Deptl Council
(GDS  ஊழியர் பிரச்சினைகள் -விடிவு தான் என்ன ?)

மேற்காண் தலைப்புகளில் சிறப்புற நிகழ்ந்திட்ட இக்கருத்தரங்கம் மாலை 6  மணி அளவில் முடிவுற்றது .மதிய உணவுக்குப்பின்னரும் கலையாதிருந்த தோழர்களின் , தோழியர்களின் ஆர்வம் - குறிப்பாக இளந்தோழர் தோழியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது .

வந்திருந்து சிறப்பித்த தலைவர்களையும் ,  சேலம் மேற்கு ,சேலம் கிழக்கு .உடுமலை , கோவை ,ஈரோடு,நீலகிரி ,குன்னூர் தோழர்களையும் ,திருப்பூர் ,மேட்டுப்பாளையம் தாராபுரம்  P3  P4  GDS தோழர்களையும் மனமுவந்து பாராட்டுகிறோம் .-----

திருப்பூர் மேட்டுபாளையம்  அஞ்சல் மூன்று , நான்கு சங்கங்கள் 

No comments :

Post a Comment