Saturday, January 9, 2016

ஈரோடு முதுநிலை தபால் அதிகாரி (Senior Postmaster) இடமாற்றம்

ஊழியர்களை - குறிப்பாக பெண் ஊழியர்களை - துன்புறுத்தி, அற்ப மகிழ்ச்சியடைந்த ஈரோடு முதுநிலை தபால் அதிகாரி (Senior Postmaster ), ஈரோடு கோட்ட JCA  நடத்திய இடைவிடாத போராட்டத்தின் காரணமாக சேலம் தலைமை அஞ்சலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  மாநில சங்கத்தின் தொடர்ச்சியான தலையீடும் இந்த வெற்றிக்கு துணையாக இருந்தது.  இது ஒரு நிரந்தர தீர்வாக கருத முடியாது.  தலை வலி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த அதிகாரி ஏற்கனவே பல இடமாற்றங்களை சந்தித்தும் தனது போக்கினை மாற்றிக்கொள்ளவில்லை .  எனவே உரிய நடவடிக்கை எடுத்து அவரை திருத்த வேண்டிய பெரும்பொறுப்பு மண்டல/ மாநில நிர்வாகத்திற்கு உள்ளது.  இல்லையெனில் ஈரோட்டு போராட்டம் சேலத்தில் தொடரும் ஆபத்து உள்ளது.  இதனை சம்பந்தப்பட்ட அதிகாரியும் உணர்ந்து சரி செய்திடுவார் என்று நம்புகிறோம் .

ஊழியர் நலன் காத்திட தொடர் போராட்டம் நடத்திய ஈரோடு கோட்ட JCA விற்கும் , அனைத்து ஊழியர்களுக்கும் , மாநில சங்கத்திற்கும் நமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும், தெரிவித்துக்கொள்கிறோம் .

No comments :

Post a Comment