Tuesday, November 5, 2013

மாநிலச் செயலரின் அறிக்கை

STUDY CAMP AND BI- MONTHLY MEETINGS OF CENTRAL, SOUTHERN, WESTERN REGIONS

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

 மத்திய மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் 

எதிர் வரும் 09.11.2013 அன்று  மத்திய மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களின் கூட்டம்  பெரம்பலூரில்  நடைபெற உள்ளது .இது குறித்து ஏற்கனவே அறிவிப்பும் , தற்போது மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையும் அனைவருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.  எனவே  மத்திய மண்டலத்தில் உள்ள  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாமல் கலந்து கொண்டு அவரவர் பகுதிப் பிரச்சினைகளை மாநிலச் சங்கத்திடம் அளிக்கவும். 

மத்திய மண்டல தொழிற்சங்க  பயிலரங்கு 

எதிர்வரும் 10.11.2013 அன்று மத்திய மண்டலத்தில் தொழிற்சங்க பயிலரங்கு  பெரம்பலூரில் நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பும் அதற்கான மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையும்  அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.  எனவே மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தங்கள் பகுதியில் இருந்து பெருமளவில் சங்க முன்னோடிகளையும் இளைஞர்களையும்  கலந்து கொண்டு பயன் பெறச் செய்திட வேண்டுகிறோம்.  இலாக்கா விதிகள் குறித்தும் , தொழிற்சங்க வரலாறு , குறித்தும், இலாகாவின் எதிர்காலம் குறித்தும் வகுப்புகள் எடுக்கப் படவுள்ளதால் , அஞ்சல் நான்கின் செயலர்களும், நிர்வாகிகளும் , GDS சங்க செயலர்களும் கூட இந்த பயிலரங்கிற்கு  நமது அஞ்சல் மூன்று செயலர்கள் அழைத்து வரலாம் . அவர்களுக்கும் இது ஒரு பயிற்சி பட்டறையாக  நிச்சயம் அமையும் என்பது திண்ணம் .

மத்திய மண்டலPMG  உடன்  இருமாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி 

மத்திய மண்டலத்தின்  BI-MONTHLY MEETING  எதிர் வரும் 18.11.2013 அன்று நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் உள்ள  கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 08.11.2013 க்குள் கிடைக்குமாறு  அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள் .

தென் மண்டல PMG உடன் இருமாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி 

தென் மண்டலத்தின்  BI-MONTHLY MEETING எதிர்வரும் 20.11.2013 அன்று  நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது . தென் மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 10.11.2013 க்குள் கிடைக்குமாறு  அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள் . 

மேலும் நாம் ஏற்கனவே தென் மண்டல அதிகாரிக்கு அளித்திட்ட MEMORANDUM  குறித்து பதில் நமக்கு அனுப்பப் பட்டுள்ளது . அதன் நகல் , தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  தற்போது அனுப்பப்படுகிறது. அதன் மீது  தங்கள் கருத்துக்களை தெரிவித்திட , விவாதித்திட , அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்திட , தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களின் கூட்டத்தினை  எதிர்வரும் 19.11.2013 அன்று மாலை 06.00 மணியளவில்  மதுரை தலைமை அஞ்சலக வளாகத்தில் கூட்டப் படுகிறது  இதற்கான ஏற்பாடுகளை  அஞ்சல் மூன்றின் மதுரைக் கோட்டச் செயலர் செய்திட வேண்டுகிறோம். எனவே தென் மண்டலத்தின் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாமல் வருகை தந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம். தங்களின் கருத்துக்களின் அடிப்படையில்தான்  அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப் படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

மேற்கு மண்டல PMG  உடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி 

மேற்கு மண்டலத்தின்  BI-MONTHLY MEETING  எதிர் வரும் 25.11.2013 அன்று நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. மேற்கு  மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 13.11.2013 க்குள் கிடைக்குமாறு  அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள் 

மேலும்  நாம் ஏற்கனவே மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்களின் கூட்டத்தில் அறிவித்தபடி ,  கோட்ட / கிளைச் செயலர்களிடமிருந்து பெறப்பட்ட பிரச்சினைகள்  பட்டியலிடப்பட்டு MEMORANDUM  ஆக தயார் செய்யப்பட்டு தற்போது  PMG, WR க்கு அனுப்பப்பட வுள்ளது . அதன் நகல் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  அனுப்பப்படுகிறது .  அதன் மீது தங்கள் கருத்துக்களை எதிர்வரும் 23.11.2013 க்குள் மாநில/ மண்டலச் செயலருக்கு தெரிவித்திட  வேண்டுகிறோம். அதன் மீது 25.11.2013  அன்று  PMG,WR  அவர்களுடன் விவாதிக்கப்படும்  என்பதை இந்த வலைத்தள செய்தியாக பதிவு செய்கின்றோம்.  

இந்த செய்திகளை  முன்னறிவிப்பாக கொண்டு  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள் செயல் படுமாறு அன்புடன் வேண்டுகிறோம். 

அன்புடன்  
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று ,
 தமிழ் மாநிலம்.




No comments :

Post a Comment