Thursday, February 26, 2015

SUCCESS TO CIRCLE UNION EFFORTS IN CANCELLING HOLIDAY DELIVERY DUTY

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் மூலம்  ஞாயிறு  மற்றும் விடுமுறை தினங்களில்  தபால் / துரித அஞ்சல் பட்டுவாடா  மதுரை மற்றும்  சென்னை பெருநகர மண்டலத்தில்  நான்கு அலுவலகங்களில் உத்திரவிடப்பட்டிருந்ததை ரத்து செய்திட PMG, SR , PMG, CCR, CPMG , TN  ஆகியோர்களிடம் பலமுறை  பிரச்சினை எழுப்பி கடிதம் அளித்து, இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் வைத்துப் பேசியும்  தீராமல்  நம்முடைய பொதுச் செயலர் மூலம்  JCM DEPARTMENTAL COUNCIL  கூட்டத்தில் வைத்து பேசிட கோரியிருந்தோம். கடந்த 16.12.2014 அன்று  நடைபெற்ற JCM  DC  கூட்டத்தின் இது குறித்து நம்முடைய பொதுச் செயலர் பிரச்சினையை  எடுத்துச் சென்று  பேசி அதற்கு  உடன்  நடவடிக்கை எடுப்பதாக பதிலும் பெற்றார். 


இருப்பினும் பிரச்சினை தீராததால் நம்முடைய  கோட்ட /கிளைச் செயலர்கள் கூட்டத்தின்  முடிவாக  அறிவிக்கப்பட்ட தமிழகம் தழுவிய மூன்று  கட்ட போராட்டத்தின்  ஒரு பிரச்சினையாக  இது எழுப்பபட்டு  நம்முடைய போராட்ட  சுற்றறிக்கை எண் . 11 இல்  இரண்டாவது பக்கத்தில்  13 வது கோரிக்கையாக இது அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது சென்னை பெருநகர மண்டலத்தில்  இந்த உத்திரவு ரத்து செய்யப் பட்டுள்ளது.

இது நமது போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும். இது குறித்து  தாம்பரம் கோட்டச் செயலர்  தமது வலைத்தளத்தில்  அளித்துள்ள செய்தி கீழே  காணவும். தாம்பரம் கோட்ட அதிகாரியின் உத்தரவு நகலும்  கீழே காணவும். மதுரை மண்டலத்திலும் இந்த உத்தரவை விரைவில் நாம் பெறுவோம். 

போராடாமல் பெற்றதில்லை ! போராடி நாம் தோற்றதில்லை ! 27.02.2015 முழு நாள்  தார்ணா  போராட்டத்தை எந்தவித தொய்வுமில்லாமல் முழுமையாக நடத்திடுமாறு  அந்தந்த மண்டலங்களில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கு அறிவிக்கிறோம். ஆர்ப்பாட்டம் மட்டும் செய்து கொள்ளலாம் என்று எந்த நிர்வாகியோ, கோட்ட/ கிளைச் செயலரோ அலட்சியமாக  இருக்கக்கூடாது என்று  மாநிலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. பிரச்சினைகள் தீரவேண்டுமானால்  முழுமையான போராட்டமே  இறுதி வழியாகும்.
=======================================================================
நற் செய்தி.

தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இயங்கி வந்த துரித தபால் பட்டுவாடா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இதற்கான உத்திரவு கோட்ட அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது , மிக்க மகிழ்ச்சி. இந்த உத்திரவை பெறுவதற்கு முழு முயற்சி எடுத்து வெற்றி பெற்ற நமது மாநில சங்கத்தின் மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களுக்கு தாம்பரம் கோட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். 

                                                                                          இப்படிக்கு 
                                                                                   B .செல்வகுமார் 
                                                                                   கோட்ட செயலர் 
                                                                           தாம்பரம் கோட்ட சங்கம் 
========================================================================
DEPARTMENT OF POSTS
Office of the Senior Superintendent of Post Offices
Tambaram Division, Chennai 600 045
Telephone no : 22266525, 22265041   Fax : 22260550

To                                                                                                     BY HAND/ e mail
The Postmaster,
Tambaram HO
Chennai 600045

       NO/G/ Sunday dely dlgs     /14   dated at Tambaram the                     25.2.15

              Sub: Speed Post Delivery on Sundays/ PO Holidays -reg.

              Ref: R.O letter no ML/81-9/NPW/2014/CCR dated 23.2.15

                 
                    The orders of the competent authority received vide R.O letter cited above, regarding discontinuing the delivery of Speed Post articles on Sundays/ Holidays at Tambaram HO with immediate effect is hereby conveyed.



Senior Superintendent
========

No comments :

Post a Comment