Tuesday, February 19, 2013

அன்பார்ந்த தோழர்களே ,


அன்பார்ந்த தோழர்களே ,
நமது திருப்பூர் ,மேட்டுபாளையம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள அனைத்து தோழர்களுக்கும்  கூட்டுச் சுற்றறிக்கை ஏற்கனேவே அனுப்பப்பட்டுள்ளது . அனைத்து  அஞ்சல் மூன்று ,நான்கு மற்றும் GDS  தோழர்களும் முடிந்தவரை அவரவர் சார்ந்த பகுதிகளில் 20 , 21/2/2013 இருநாட்கள்  வேலைநிறுத்தத்தை சக தோழர்களிடம்  விளக்கிட வேண்டுகிறோம் .

போராட்டம் நாம் விரும்பி அழைப்பதல்ல . நம் மீது  திணிக்கப்படும்போது வீரத்துடன் 
எதிர்கொள்வது . போராடாமல் ஒரு அடிகூட முன்னேற்றமில்லை என்பதுதான் வரலாறு .
போராடும் களத்தில் NFPE முன்னணியில் இருக்கும் .பின்னால் வருகிற தோழர்கள் நம்முடன் தொடர்கிறார்களா என்பதை திரும்பிப் பார்க்காமல் முன்னேறிச்செல்வது தான் நமது பாரம்பரியம் .

போராட்டங்கள் இல்லாமல் யாராட்டமும் செல்லாது . உரிமைக்கான போராட்டம் தான் 
சரியான தேசபக்தி . போராடுவோம் . நாட்டைக் காப்போம் .

தோழையுடன் 
P 3, P 4 ,GDS  NFPE   திருப்பூர் கோட்டம் 

ALL COMRADES ARE REQUESTED TO INTIMATE OTHERS TO SEE OUR WEBSITE FREQUENTLY.

No comments :

Post a Comment