Thursday, December 13, 2012

அன்புத் தோழர்களே ! தோழியர்களே நன்றி ! நன்றி!! நன்றி !!!



நன்றி ! நன்றி!! நன்றி !!!

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! அன்பார்ந்த வணக்கங்கள் ! 

இன்றைய  நாள் .......  இனிய நாள் !தமிழக  அஞ்சல் தொழிலாளர் வாழ்வில் மறக்கமுடியாத நாள் ............. ஆம் .  12.12.2012.........  இது ஒரு வரலாற்று நிகழ்வு நாள் ............. 11, 12.07.1960 வேலை நிறுத்தம் போல, 19.09.1968 வேலை நிறுத்தம் போல ...... இது  ஒரு வரலாற்று சிறப்பு மிக்க  வேலை நிறுத்த நாள்  .... 

நம் அஞ்சல் அரங்கில்,  NFPE  இயக்கத்தின் தனித்த வேலை நிறுத்தம்  என்றாலும் ..... காணும் இடம் நோக்கினும் ..........  பேதம்  ஏதுமின்றி  ஓரணியாய் ........ ஒரே குரலாய் ....... ஓங்கி ஒலித்தது  NFPE  இன்  சங்க நாதம் ............. இது தான் வெற்றி .........வட திசை நோக்கி .............  இமயத்தின்  திசை நோக்கி .......... தமிழகத்தின்  வெற்றி சங்க நாதம் .......... ஓங்கி  ஒலித்தது  ஒரே குரலாய் ............ நாளைய வரலாற்றுக்கு  கட்டியம் கூறுவது .......... இன்றயை தமிழகத்தின் குரல்  ஒன்றே !


கோரிக்கை தீர்வு நோக்கி  5 ஆவது கட்ட போராட்டம் என்றாலும் ....... மிகப் பெரிய  போராட்டங்கள் ......... 26.07.2012 பாராளுமன்றம் நோக்கிய பேரணி ........அதில் மத்திய அரசு ஊழியர் மொத்தம் 20000  பேரில்   தமிழக அஞ்சல் பகுதியில் இருந்து  ஆயிரம் பேருக்கு மேல் நாம் கலந்து கொண்டோம் என்பது  இதுவரை இல்லாத ஒரு வரலாற்று நிகழ்வு ........ அதிலும்  தமிழக அஞ்சல் மூன்றில் இருந்து  600 க்கும் மேலே ........ இதுவரை இல்லாத புதிய நிகழ்வு ...........


இரண்டாவது பெரிய  நிகழ்வு ....... 12.12.12  மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தம் .......... இதில் நம் பங்கு .........  இது வரை இல்லாத அளவில் ............. தமிழகம் முழுமைக்கும் ........ NFPE  இல்  90%............. மொத்த ஊழியர்  எண்ணிக்கையில்  80%....... இந்த  ஒற்றுமை  சாத்தியம் தானா ?


சாத்தியம் ஆயிற்று என்பது  இன்றைய   அஞ்சல் மூன்றின்  அங்கீகாரத்திற்கு பின்னரான நிகழ்வு .......  இது நமது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி ...... ஒன்றுபட்ட ........ தொழிலாளர் கோரிக்கை மீதான ஈடுபாட்டுக்கு கிடைத்த வெற்றி ......... தனி மனித விருப்பு வெறுப்புகளைத் தூக்கி எறிந்த வெற்றி . NFPE  இன் பெயராலே  நாம் ஒன்று பட்டதன் வெற்றி ...... இதுதான்  ஆரோக்கியம் ......  தனிப்பட்ட பிரச்சினைகள் அரங்குகளின் விவாதத்திற்குள்ளே ......  பொதுப் பிரச்சினைகளில் என்றும் நாம் ஒன்றே ........  குறுகிய வட்டங்களை விட்டு நாம்  விடுபட்டதன் அடையாளம்  இந்த வேலை நிறுத்தம் ....... இந்த திசை நோக்கி நாம்  சிந்திப்போம் ........... NFPE  இன் ஒரே குரலாய் இனி நாம் ஒலிப்போம் ! இதுவே வெற்றி !


16 லட்சம் மத்திய அரசு ஊழியர் போராட்டத்தில்  இது ஒரு பகுதி ..... ஏழாவது ஊதியக்குழு நோக்கி ...... 50% பஞ்சப்படி இணைப்பு நோக்கி,  புதிய  பென்ஷன்  திட்டத்திற்கு எதிராக .......GDS  ஊழியருக்கும்  ஊதியக்குழுவே  அவர்களது ஊதிய, இதர பணித்தன்மைகளை  பரிசீலிக்க வேண்டி ....போனஸ் உச்ச வரம்பு நீக்கிடக் கோரி ... அடுத்த கட்ட போராட்டத்திற்கு ...... ரயில்வே, பாதுகாப்புத் துறை ஊழியர்களையும்  ஒன்றுபடுத்தி ... காலவரையற்ற  வேலை நிறுத்த தயாரிப்புகளை  நாம்  செய்திட உள்ளோம் ........ 


அனைத்து மத்திய அரசு ......... மாநில அரசு....... பொதுத்துறை ஊழியர்களுக்கும் கோரிக்கைகளை முன்னெடுக்கும் முன்னோடியான   சம்மேளனமாக  நம் NFPE  விளங்கும்  என்பது கடந்த கால வரலாறு. அதனால் தான்   NFPE  இயக்கத்தை ' THE VAN GUARD  OF THE CENTRAL GOVERNMENT EMPLOYEES MOVEMENT '  என்று  அன்றே கூறினார்கள். இன்றும் அந்த வழியில்  நாம் முன்னெடுத்தோம்  கோரிக்கைகளை !  வென்றெடுப்போம்  நாளைய  வெற்றிகளை ! இதுவே எதிர்கால வரலாறு !


ஒரு சில இடங்களில்  நம் தோழர்கள்  தம்மைத்  தாமே   பரிசீலிக்க வேண்டிய நேரமிது .. தனிப்பட்ட  மன உணர்வுகள் இயக்கத்தை சிதைத்துவிடும்  என்பதை  அவர்கள் உணர வேண்டுகிறோம்..... இயக்கம் இருந்தால் தான் அவர்களே இருப்பார்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டுகிறோம்....... தம்  மன நிலைகளில் மாற்றம் பெற நாம் அன்போடு வேண்டுகிறோம் ...... அந்த இடங்கள் வெகு சிலவேனும் ........ அவற்றைக் குறியிட்டுக் காட்ட நாம் மனம் ஒப்பவில்லை எனினும்  .......  தேவை அவர்களின் மன மாற்றமே !  அது அவர்களே  அறிய ...... உணர வேண்டிய உண்மையாகும்.  அந்த  திசை நோக்கி சிந்திக்க அன்புடன்  வேண்டுகிறோம் ..... நம் அடுத்த கட்ட  போராட்டம்  90% வெற்றி அல்ல ....100 க்கு 100% வெற்றிக்கான இலக்காக  இன்றே மனதில்  கொள்ள வேண்டுகிறோம்.


இன்றே கோரிக்கை தீர்வு நோக்கி  மத்திய அரசு பரிசீலிக்க  , தீர்வு காண அதன் அனைத்து துறைகளிலும்  நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும்   நம் கோரிக்கையின் குரல் ஓங்கி ஒலிக்கப்பட்டுள்ளதுதனித்து நின்றவர்கள் எல்லாம் , தடுக்கி விழுந்தவர்கள் எல்லாம் ,  அன்றைக்கு மீசையில் ஒட்டிய மண்ணை இன்றைக்கு NFPE  துடைக்கும் என்று  எண்ணுகிறார்கள் ...... இந்த ஆலவிருட்ச நிழலில்  தாங்கள் காய் பறித்து  'கதைக்கலாம்'  என்று எண்ணுகிறார்கள் . இது நூறாண்டுகள் கடந்த  இயக்கம் ..... அனைத்து தொழிலாளர்கள் இயக்கங்களுக்கும் முன்னோடியான  இயக்கம் ....  நேற்று பெய்த  மழையில் முளைத்த  காளான்கள் ...... மழை முடியுமுன்னரே அழிந்த வரலாறு தான் இங்குண்டு .  


65 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில்  கடந்த காங்கிரஸ்   பேரியக்கம் , 'இரும்பு மனிதர்' என்று பகரப்பட்ட  இந்திரா காந்தி அம்மயாராலேயே தமக்கென 1968இல்   உருவாக்கிய FNPO இயக்கம்,  44 ஆண்டுகள் கடந்த பின்னரும் , இன்று வரைகூடNFPE  க்கு எதிராக  15% உறுப்பினரின் நம்ம்பிக்கையை கூட பெறமுடியவில்லை என்பது  இயக்க வரலாறு .


வலிமை வாய்ந்த பாரதீய ஜனதா  அமைச்சர்கள் அத்வானி, வாஜ்பாய்  போன்றோர்கள்  , 1977 ஜனதா கட்சி அரசில் , தமக்கென  உருவாக்கிய BPEF  இயக்கம், 35 ஆண்டுகள் கடந்த பின்னரும்  , NFPE  க்கு எதிராக 5% உறுப்பினரின் நம்பிக்கையை கூட பெற முடியவில்லை என்பதும் இயக்க வரலாறு


இன்று நம்மால் தோற்றுவிக்கப்பட்ட  'அய்யாக்கள் '  நாளைய வெற்றியை  பங்கு போடும்  ' அப்பாக்களா ?'   அப்படியாயின்  அவர்கள் ஏழு நாட்கள் தனித்தே  போராடி என்ன செய்தார்கள்? . 'கருணையோடு பரிசீலிப்பீர்கள் என்பதால்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை   கைவிடுகிறேன்' என்று   தாமே ஓடிப்போய் கதறியழுது ஏன்  சொன்னார்கள்? 17.12.2008 வேலைநிறுத்த  மாவீரர்கள் , கோபிநாத்  கமிட்டியை விடுத்து , ஓராண்டு கழித்தும் ' நடராஜமூர்த்தி' கமிட்டியின் அறிக்கையைக்கூட  பெறமுடியாத நிலை போலத்தான் இதுவும்.  அதுவும் கூட NFPE  இன் 06.10.2009 காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பின் பின்னாலே 09.10.2009 இல் வெளியிடப்பட்டது போலத்தான் இன்றைய நிலையும்  .


குப்பைகளைத் தூக்கி எறியுங்கள் . ஊழியர்களை ஒன்று  படுத்துங்கள். எதிர்காலம்  இருண்ட காலமாக  இருக்கிறது . அதில் NFPE  என்ற ஒளி  விளக்கு ஒன்றே  பாதை வகுக்கும் என்பது  நம்  வரலாறு .  தனியார்மய  காலத்தில், அந்நிய மய  காலத்தில்  , நம் தொழிற்சங்கப் பாதை  நிச்சயம் மலர்ப்பாதை அல்ல . முட்களும் , பாம்புகளும்  நிறைந்ததே அந்தப் பாதை. ஆனாலும் அதில் பயணிக்க வேண்டியே உள்ளது .  


சங்கம் அமைக்கக் கூட தடை போடப்பட்டு மனமகிழ் மன்றம் அமைத்தும்  தொழிற்சங்கப் பாடம் சொல்லி ஊழியர்களை ஒன்று திரட்டிதன்னை இழந்த  பாபு  தாராபாதா போன்ற உத்தமத் தலைவர்களின்   வரலாற்றை  நாம் நினைவில் கொள்வோம்.  அந்த திசை நோக்கி பயணிப்போம்.


போராட்டத்தில்  உடன் நின்ற ஆயிரம் ஆயிரம்  அன்புத் தோழிய/ தோழர்களுக்கு   மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி ! கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  சங்க முன்னோடிகளுக்கும்  நம்  நெஞ்சார்ந்த நன்றி. ! தொழிற்சங்க வரலாற்றில்  இறுதிப் போராட்டம் என்று எதுவுமே இல்லை!
இன்றைய நம்  இலக்கு ஏழாவது ஊதியக்குழு உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளின் நிறைவே!   அந்த திசை நோக்கி அடுத்த கட்ட போரட்டத்திற்கு  நாம் தயாராவோம்

NFPE  இன் வெற்றி உங்களின் வாழ்வு!.
 உங்களின் போராட்டம்  நம் அனைவரின் எதிர்காலம் ! .

   நன்றி தோழர்களே ! நன்றி !
என்றும் அன்புடன் 

J.R. , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று
தமிழ் மாநிலம்.


Wednesday, December 12, 2012

12-12-12 ALL INDIA STRIKE - HISTORIC SUCCESS
CONGRATULATIONS!  WELL DONE COMRADES!!

·         100% STRIKE IN MAJORITY OF POSTAL CIRCLES
·         AVERAGE 75-80% STRIKE IN ALL CIRCLES.
·         80% OF THE POST OFFICES & RMS OFFICES INCLUDING BOs REMAINED CLOSED.
·         DELIVERY WORK COMPLETELY PARALYSED DUE TO STRIKE BY DELIVERY STAFF.
·         80 - 100% STRIKE IN CIRCLE/REGIONAL OFFICES.
·         IMPRESSIVE STRIKE IN POSTAL ACCOUNTS OFFICES.
·         70 - 100% GRAMIN DAK SEVAKS PARTICIPATED IN THE STRIKE INSPITE OF ANTI CONFEDERATION, ANTI-NFPE PROPAGANDA BY CERTAIN VESTED INTERESTS.

POSTAL & RMS EMPLOYEES INCLUDING GRAMIN DAK SEVAKS HAVE UPHELD THE INSPIRING TRADITION OF COM. BABU TARAPADA, DADA GHOSH, K.G.BOSE, N. J. IYER, K.ADINARAYANA AND MANY OTHER LEADERS WHO SACRIFICED THEIR LIFE FOR THE UNITY AND ADVANCEMENT OF POSTAL & RMS EMPLOYEES & OTHER CENTRAL GOVERNMENT EMPLOYEES.  LONG LIVE NFPE!  LONG LIVE CONFEDERATION!!


WE HAVE PROVED THAT NFPE ALONE CAN PARALYSE THE POSTAL & RMS SERVICES INCLUDING BRANCH POST OFFICES.


RED SALUTE COMRADES! RED SALUTE!!


STRIKE COMPLETE IN INCOME TAX, ABOVE 70-80% STRIKE IN MORE THAN 60 CENTRAL GOVT. DEPARTMENTS INCLUDING AUDIT & ACCOUNTS, PRINTING & STATIONARY, GEOLOGICAL SURVEY OF INDIA, CUSTOMS & CENTRAL EXCISE, INDIAN BUREAU OF MINES, CGHS, GROUND WATER BOARD, CPWD, CENSUS, ATOMIC ENERGY, DEFENCE ACCOUNTS, ISRO ETC


PREPARE FOR INDEFINITE STRIKE


IF 15 POINT CHARTER OF DEMANDS INCLUDING APPOINTMENT OF SEVENTH PAY COMMISSION, DA MERGER, SCRAPING OF CONTRIBUTORY PENSION SCHEME/PFRDA BILL, GDS DEMANDS, FILLING UP OF VACANCIES, COMPASSIONATE APPOINTMENTS ARE NOT SETTLED

Sunday, December 9, 2012

அறப்போராட்டம்




போராட்டங்களில்லாமல் என்றுமே  
முன்னேற்றமில்லை .

நமக்காக மட்டுமில்லாது  வருகிற தலைமுறைக்காகவும்  
நாம்  நடத்துகிற  அறப்போராட்டம் 

12-12-12
STRIKE!          STRIKE!!        STRIKE !!!
12TH DECEMBER 2012 - ALL INDIA CENTRAL
GOVT. EMPLOYEES STRIKE
13 lakhs Employees unitedly demand the Central Government to
CHANGE THE POLICIES
“WORKERS ARE NOT BEGGARS”
STRIKE -    IF YOU WANT TO STOP PRICE RISE AND EROSION IN REAL WAGES.
STRIKE -    IF YOU WANT 7TH PAY COMMISSION AND FIVE YEAR WAGE  
                   REVISION.
STRIKE -    IF YOU WANT MERGER OF DA WITH PAY.
STRIKE -    IF YOU WANT REMOVAL OF RETROGRADE CONDITIONS ON
                    COMPASSIONATE APPOINTMENTS.
STRIKE -    IF YOU WANT TO FILL UP ALL VACANT POSTS.
STRIKE -    IF YOU WANT THE GRAMIN DAK SEVAKS TO BE TREATED AS  
                    CIVILSERVANTS.
STRIKE -    IF YOU WANT TO END DISCRIMINATION TOWARDS GDS AND  
                    EXTENSION OF ALL BENEFITS AT PAR WITH REGULAR  
                    EMPLOYEES.
STRIKE -    IF YOU WANT THE REVISION OF WAGES OF CASUAL
                    LABOURERS  AND REGULARISATION.
STRIKE -    IF YOU WANT TO SCRAP PFRDA BILL AND NEW PENSION
                   SCHEME.
STRIKE -    IF YOU WANT TO STOP DOWNSIZING, OUT SOURCING,  
                   CONTRACTORISATION, CORPORATISATION AND PRIVATISATION.
STRIKE -   IF YOU WANT TO REVIVE THE JCM FORUMS AND SETTLE    
                   ANOMALIES INCLUDING MACP ANOMALY.
STRIKE -    IF YOU WANT TO IMPLEMENT ARBITRATION AWARDS.
STRIKE -    IF YOU WANT FIVE PROMOTIONS.
STRIKE -    IF YOU WANT REVISION OF OTA RATES AND NIGHT DUTY     
                   ALLOWANCE.
STRIKE -    IF YOU WANT ELIGIBLE PRODUCTIVITY LINKED BONUS FOR ALL.
STRIKE -    IF YOU WANT “RIGHT TO STRIKE” AS A LEGAL RIGHT
STRIKE -    IF YOU WANT TO STOP TRADE UNION VICTIMIZATIONS.
                   STRIKE -   TO CHANGE THE POLICY OF THE GOVERNMENT
                   STRIKE-    TO ENSURE JOB SECURITY AND NEED BASED      
                                      MINIMUM WAGE
                   STRIKE-    TO PROTECT CENTRAL SERVICES INCLUDING POSTAL

LET US STRIKE UNITEDLY FOR A BETTER TOMORROW
NFPE ZINDABAD! CONFEDERATION ZINDABAD!!
WORKING CLASS UNITY ZINDABAD!!!


“ORGANISE
“Organise if you want real living wages,
 Organise if you want to have your working hours reduced,
 Organise if you desire better treatment from you superior officers,
 Organise if you want that the authorities should consult and consider your
 opinion in    all administrative measures affecting you”.

- Babu Tarapada Mukherjee, 1921 Lahore Speech

“We must therefore, determine to have our pay increased and working hours reduced. We must fight and fight and fight strenuously to secure what alone can make life worth living. We must make up our minds whether we shall continue to live as human cattle or “take up arms against a sea of troubles and by opposing, end them”.
- Babu Tarapa Mukherjee, 1921 Lahore Speech
JAWAHARLAL NEHRU ON 1946 P&T STRIKE
“We have a very big gap between the cost of living and wages, and it is that gap which causes hunger and distress and ultimately strike. The point is that all over India there is that gap today and unless that gap is bridged, there will be industrial troubles. These can be bridged either by lowering the prices or by raising the wages. I see today vast fortunes accumulated in the hands of a few. On the other hand, the vast number of people are being faced with a heavy burden of prices. How are we to meet this question of strike? It is not possible or desirable to use the powers of the state (Govt.) against the strike”.

(Pandit Jawaharlal Nehru -Address to the Associated chamber of India in Kolkata on 12-12-1946).
“UNITY FOR STRUGGLE & STRUGGLE FOR UNITY
K.G. BOSE
“When the living conditions of the employees have been made critical by the accentuating economic crisis and the Govt’s persistent efforts to make the employees bear the burden of such crisis, when the discontentment among the employees are generating due to Govt’s refusal to come to the succor of the employees in such a critical living condition and when this discontentment is on the point of bursting out on surface particularly centering around the issue of Pay Commission - a great urge for unity among the employees and workers is being increasingly found manifest. The urge being found expression whenever call for united mass actions have been initiated in recent times to defend the living conditions and democratic rights of the workers and employees. Struggle for building up unity at the grass roots level, which can alone can ensure success at our struggles for higher wages for better living conditions and for democratic rights, is the key-task today”.
- K.G.Bose - 1973 - Article.




Thursday, December 6, 2012

Who stood first in LGO exam






Com. K.S.Muthuselvan who stood first in
LGO exam ( Mark 138) is the Postman of
Tirupur Cotton Market SO is our active NFPE  comrade


Com.K.S.Muthuselvan


Wednesday, December 5, 2012

திருப்பூர் கோட்டத்தில் LGO தேர்வில் வென்றோர்

நமது திருப்பூர் கோட்டத்தில் LGO தேர்வில்  வென்றோர்  நால்வர் . 

1.K.S.Muthuselvan, Postman, Tirupur Cotton Market SO


2.C.Bharathi, Mail Overseer, Dharapuram



3. S.Dheenadhayalan, Postman, Avanashi SO



4.S.Krishnan, Postman, Tirupur North SO



நான்கு தோழர்களுக்கும்  வாழ்த்துக்கள் . 


மனமார்ந்த  பாராட்டுக்கள் .



--------- P 3, P 4, GDS - NFPE  TIRUPUR ,METTUPALAYAM , 


DHARAPURAM 

Tuesday, December 4, 2012

REPORT ON AIPEU-GDS (NFPE) – TAMIL NADU CIRCLE CONFERENCE


REPORT ON AIPEU-GDS (NFPE) – TAMIL NADU CIRCLE CONFERENCE


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE ) இன் 
தமிழ் மாநில முதல் மாநாடு மாபெரும் வெற்றி  !

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு  பிரச்சினைகள் எதுவும் இல்லாத , GDS  ஊழியர்கள்  மிகவும் மகிழ்ச்சியுடன்  பங்கேற்ற,  வரலாற்று சிறப்பு மிக்க NFPE  சம்மேளனத்தின் கீழ் அமைந்த AIPEU GDS (NFPE ) சங்கத்தின் முதலாவது தமிழ் மாநில மாநாடு  கடந்த 02.12.2012 அன்று  நாமக்கல்  நகரில் அமைந்துள்ள S.P.S. திருமண மண்டபத்தில்  காண்போர் வியக்கும் வண்ணம்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது. 

'படை பெருத்ததால்  பார் சிறுத்ததோ ' 'நாமக்கல் நகர்தான்  சிறுத்ததோ'  என வியக்கும் வண்ணம் 1200 க்கும் மேற்பட்ட GDS  தோழர்களின் பங்கேற்பு , அணி வகுத்த பேருந்துகள் , மகிழுந்துகள்  எனத்  தன்னார்வமாய்  குவிந்த  40 க்கு மேற்பட்ட  வாகனங்களின் வரிசை காண்போரை வியப்பில் ஆழ்த்தியது . இது 'கூட்டிய கூட்டமல்ல' , NFPE  என்ற மந்திரச் சொல்லின்பால் பற்று கொண்டு  'கூடிய கூட்டம்' என்று , மாநாட்டு அரங்கமும் தோழர்களின்   மகிழ்ச்சி வெள்ளமும்  மாநாட்டுக்கு கட்டியம் கூறியது . 

தமிழக NFPE  வரலாற்றில் முதல் முறையாக NFPE சம்மேளனத்தின் தலைவர்கள் , அகில இந்திய சங்க நிர்வாகிகள், தமிழ் மாநிலத்தின் அனைத்து மாநிலச் செயலர்கள் ஒருங்கே  ஒரே மேடையில்  கூடி AIPEU  GDS (NFPE ) சங்கத்தை வாழ்த்தியதும் , இனி தமிழ் மாநிலத்தில் 9 சங்கங்களும்  ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும்  என்று முழங்கியதும் கூட  ஒரு இயக்க வரலாறுதான். 

மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் பட்டியல் மிக நீளும் . ஆனால் அதில் முக்கியமானவர்கள் யார் யார் என்பதை கீழே தருகிறோம் .

Com.M.Krishnan, Secretary General, NFPE,

Com.K.Ragavendran, Working President, CCGE&W,
Com.K.V.Sridharan, Leader, JCM Staffside &  former Genl. Secy, AIPEU Gr.C., 
Com.P.Pandurangarao, General Secretary, AIPEU-GDS (NFPE)
Com.C.Chandra Sekhar, Working President, NFPE,
Com.S.Raghupathy, Asst. Secretary General, NFPE,
Com.S.Appanraj General Secretary SBCO Union.
Com.N.Gopalakrishnan, Working President, Gr.C., 
Com.A.Veeramani, Orgg. Secretary, AIPEU Gr.C (CHQ)
Com.J.Srivenkatesh, Circle President, Gr.C.,
Com.J.Ramamurthy, Circle Secretary, Gr.C.,
Com.Gopu Govindarajan, Org. Secretary, P-IV(CHQ)
Com. G.Kannan, CirclePresident, P-IV.,
Com. V.Rajendran, Circle Secretary, P-IV
Com.K.Sankaran, Circle Secretary, R-III.,
Com.K.Rajendran, Circle Secretary, R-IV.,
Com.P.Nagarajan, Org. Secretary, AIPAOEU (CHQ),
Com.R.B.Suresh, Circle Secretary, AIPAEA,
Com.A.Ragupathi Umashankar, Circle Secretary, AIPAOEU.,
Com.R.Dhanraj, Dy. General Secretary, AIPEU-GDS(NFPE) (CHQ)
Com.V.Murukan, Financial Secretary, AIPEU-GDS(NFPE) (CHQ)
Com.K.C.Ramachandran, Asst. General Secretary, AIPEU-GDS(NFPE) (CHQ)
Com.DSivagurunathan, Working President, AIPCPCCWF (CHQ)
 
 மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக  காலை 10.00 மணியளவில்  தேசியக் கொடியை தோழர் .KVS அவர்களும் , சம்மேளனக் கொடியை தோழர். கிருஷ்ணன் அவர்களும் AIPEU  GDS (NFPE ) இன் கொடியை  தோழர் பாண்டுரங்க ராவ் அவர்களும்  ஏற்றி வைத்து நிகச்சிகளைத் துவங்கினர். 
 
வரவேற்பு குழுவின் சார்பில் நம்முடைய மூத்த தோழர் , நாமக்கல் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின்  முன்னாள் தலைவர்  தோழர் T . மணி அவர்கள்  அனைவரையும் வரவேற்றதுடன் நாமக்கல் கோட்டத்தின் வரலாற்று நினைவுகளை  பதிவும்  செய்தார்.  

தொடர்ந்து GDS  சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர்  தோழர். R . தனராஜ் அவர்கள் தேர்தலுக்கு முன்னதான  மாநாட்டு நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி  தனது உரையால்  முத்திரை  பதித்தார் . 

GDS சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் P . பாண்டுரங்க ராவ் அவர்கள் துவக்க உரையாற்றினார்.  அதற்கு பின்னர்  மாநில சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப் பட்டது  GDS  சங்கத்தின் அகில இந்திய நிதிச் செயலர் தோழர் முருகன் அவர்கள்  நிர்வாகிகள் தேர்தலை முன்னின்று சிறப்பாக நடத்தினார்.   

கீழ்க்காணும் நிர்வாகிகள், மாநாட்டு அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான  தோழர்களின் உற்சாகமான கோஷங்களுக்கும் கரவொலிகளுக்கும் இடையே  ஏகமனதாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு  முறையாக அறிவிக்கப் பட்டார்கள். 

 
 President                     :    Com. S.Ramaraj, Kovilpatti Dn.

Vice President:                Com.V.Kaliamoorthy,Pondicherry Dn.   
                                        :    Com. M.Elangovan, Pattukottai Dn.
                                        :    Com. N.Sadasivam , Erode Dn.

Circle Secretary          :    Com. R.Dhanaraj, Nagapattinam Dn.

Asst. Circle Secy       :     Com.K.C.Ramachandran,Namakkal Dn.
                                             Com.M.Mahalingam, Erode Dn.
                                       :     Com. R.Sivaguru, Tiruvannamalai Dn.
                                       :     Com. V.Rajasekhar, Madhurai Dn.
                                       :     Com. S.Vijayakumar, Tambaram Dn.

Financial Secretay         : Com. R.Vishnudevan, Srirangam Dn.

Asst. Fin. Secretary       : Com. M.Durai, RMS ‘T’ Dn. Trichy.

Orgg. Circle Secretary   : Com. B.Jayaraj, Coimbatore Dn.
                                             : Com. P.Panner Selvam, Trichy Dn.
                                             : Com.S.Shanmugam, Salem West Dn.

Auditor                           :     Com.M,Nagarajan, Mayiladhuthurai Dn.

தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு  மாநிலத்  தலைவர் தோழர். ராமராஜ் அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்தினார்.

மாநாட்டுத் தீர்மானமாக , முறையான முதலாம் அகில இந்திய மாநாட்டினை  தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் நடத்துவதென்று  தீர்மானம்  பலத்த கரவொலியுடன் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. இது தொழிற் சங்கத்தில் ஒரு வரலாற்றுப் பதிவாக எதிர்காலத்தின்  பதியப் படும் என்பதால்  நம் தமிழகத்திற்கு கிடைத்த ஓர்  அரிய  வாய்ப்பு என்றே அனைவரும் கூறி மகிழ்ந்தனர். 

வரவேற்புக் குழுவால் தமிழ் மாநில GDS  சங்கத்திற்கு ரூ. 5000/- மும் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.5000/- மும்  நன்கொடையாக மேடையிலேயே வழங்கப்பட்டது.

எதிர்வரும் 12.12.12 வேலை நிறுத்தத்தில் முழுமையாகப் பங்கு பெறுவதென்றும் , தமிழக NFPE  மாநிலச் சங்கங்களுடன்  இணைந்து பணியாற்றுவதென்றும்  ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 

நாமக்கல் கோட்ட GDS சங்கத்தின் செயலர் தோழர் K .பொன்னுசாமி  அவர்கள் நன்றி கூற , மாநாடு இனிதே நிறைவுற்றது.  

மாநாட்டு ஏற்பாடுகள் , அருமையான  உணவு, தங்குமிடம், மனம் கனிந்த உபசரிப்பு என்று எல்லாவகையிலும் மிகக் குறுகிய காலத்தில் ,   மிகச் சிறப்பாக செய்த மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கும்  ,  நாமக்கல், திருச்செங்கோடு NFPE அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, GDS  சங்கங்களுக்கும்  , குறிப்பாக வரவேற்புக் குழுவின்  தோழர். PKR என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் P. K . ராமசாமி அவர்களுக்கும் நம் அஞ்சல் மூன்று GDS  மாநிலச் சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். 

மாநாட்டில், தன்னார்வமாய்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து  எழுச்சியுடன் கலந்து கொண்ட  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS  மூன்று, RMS  நான்கு ,GDS  சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் , தோழர்களுக்கும் இதர அன்புத்  தோழமை உள்ளங்களுக்கும்  நம் அஞ்சல் மூன்று GDS  மாநிலச் சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றி என்றென்றும் உரியதாகும்.

நமது வெற்றியை நாளைய  சரித்திரம் சொல்லும் ! 
இப்படை தோற்கின் எப்படி வெல்லும் ? 
நீதிக்கு இது ஒரு போராட்டம் !
இதை நிச்சயம்  உலகம் பாராட்டும் ! 

மாநாட்டுக் காட்சிகள் 


மேலே - மண்டபத்திற்கு வெளியே  முப்புறமும் 
கீழே - மண்டபத்திற்கு உள்ளே கூடிய கூட்டம் 


கொடியேற்றும் காட்சிகள் 


மேடையில் தலைவர்கள் 


























12.12.12. வேலைநிறுத்தத்தைவெற்றிபெறச்செய்வீர்...

         7ம் ஊதியக்குழு, 50% பஞ்சப்படியினை அடிப்படைச் சம்பளத்தோடு இணைத்தல், புதிய பென்ஷன் திட்டத்தினைக் கைவிடுதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 12.12.12. அன்று நடைபெறவிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த்தில் அனைவரும் கலந்து கொண்டு,  TIRUPUR DIVISION இந்தியாவிலேயே முன்னணி போராட்டக்களமாகத் திகழ்வதற்கு, உறுதியுடன் வேலைநிறுத்தத்தில் பங்குகொள்ள அனைத்துத் தோழர்களும அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

--- P3 P4 GDS --- TIRUPUR, METTUPALAYAM, DHARAPURAM