Wednesday, July 13, 2016

தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் பணி ஓய்வு வாழ்த்துக்கள் !!!

                                             அன்புத்தோழர் ஸ்ரீ வெங்கடேஷ், நீங்கள் இந்திய அஞ்சல் துறையின் வளர்ச்சிக்காக 34 ஆண்டுகள் சிறப்பாக பணி செய்து பொது மக்கள் நமது துறையின்மீது மதிப்பு கொள்ளசெய்தீர் .

                                             தமிழக NFPE தொழிற்சங்க வரலாற்றில் உங்களுக்கென ஒரு தனியிடத்தை பெற்று அனைவரின் பாராட்டுதலைப் பெற்ற ஒரு சில தலைவர்களில் நீங்களும் ஒருவர் .தமிழ் மாநில சங்கத்தின் மாநிலத் தலைவராக நீங்கள் பணியாற்றியவிதம் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்கும் .தொழிற்சங்கத்தில் நேர்மை,அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட உங்களது தொழிற்சங்க பணியை தோழமையுடன் வாழ்த்துகிறோம் .
                                            உங்களின் பணி ஓய்வுக்காலம் இனிமையாக அமைந்திடவும் , உங்களது இலட்சியங்கள் ஈடேறவும் வாழ்த்துகிறோம் .



தோழமையுள்ள வாழ்த்துக்களுடன் 
அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு 
GDS NFPE கோட்ட சங்கங்கள் 
திருப்பூர் 641601

No comments :

Post a Comment