Thursday, November 28, 2013

60 வயதில் ஆற்றல்மிகு இளைஞனாய் தீரமிகு செயல்பாட்டில் வாலிபனாய் வலம் வரும் நம் NFPE சம்மேளனம்

உதவிக் கரம் நீட்டுங்கள் !


அன்புத் தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள் !

இது ஒரு முக்கியமான வேண்டுகோள் !  நமக்காக 35 ஆண்டு
காலம் தொழிற்சங்கத்தில் தொய்வில்லாதுஎந்த வித எதிர்பார்ப்பும்இல்லாதுஅர்ப்பணிப்புஉணர்வுடன்  பணியாற்றிய  மூத்த தோழர் ஒருவரின் துன்ப காலத்தில்  நம்மால் நாம் செய்யக் கூடிய உதவியாக நினைத்து  நீங்கள் ஆற்றிட வேண்டியது  இது .

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் அரக்கோணம் கோட்டச் செயலராக ,பின்னர்  கோட்டச் சங்கத்தின் தலைவராக பின்னர்  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவித் தலைவராக  பணியாற்றிய  நம் அருமைத்தோழர் 
E .V. என்று அழைக்கப்படும் தோழர்.
E .வெங்கடேசன்  அவர்களின் ஒரே மகன்  
திரு.  V .கார்த்திகேயன் அவர்கள் (வயது 35)  வேலூர்  VIT  இல் LAB  INSTRUCTOR  ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு  சமீபத்தில் தான்  திருமணம் நடைபெற்றது.  அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில்  புதிதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி  நியமனம் பெற்ற அன்புத்தோழியர்.  சுஜாதா  அவர்கள்  தான்  அவருக்கு துணைவியார் .

திரு . கார்த்திகேயன் அவர்கள்   இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு  பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல்  இறுதியில்  மருத்துவர்களின் பரிந்துரைப்படி  சிறப்பு சிகிச்சை பெற  சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள   GLOBAL HOSPITAL இல்  அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டு , LIVER TRANSPLANT செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்கமுடியும் என்று அறிவித்து விட்டார்கள் . ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செலவு மட்டுமே ரூ.24  லட்சம் என்று கூறிவிட்டார்கள். DONOR ஆக  தோழியர் சுஜாதா அவர்களே  நிர்ணயிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து  DISCHARGE வரை மொத்தமாக 30 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டியிருக்கும் என்று மருத்துவ மனையில் கூறிவிட்டார்கள்.

MIDDLE CLASS FAMILY யான அவர்களால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்திட இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே  தனது TNHB FLAT ஐக் கூட அடமானம் வைத்து  அறுவை சிகிச்சைக்காக 21லட்சம்  கட்டி,கடந்த சனியன்று  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. TRANSPLANTATION வெற்றிகரமாக நடத்தப் பட்டதாக  மருத்துவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது .  தோழர். E.V. அவர்களின் மகனும் மருமகளும் தற்போது ICU வில் உள்ளனர்.

இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்திட்டால் அது அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி  நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

சிறு அளவில் இருந்தால் கூட அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திடும் என்பதே நம்  நம்பிக்கை . உதவ முடிந்தவர்கள் உடன்  கீழே கண்ட முகவரிக்கு EMO வாகவோ DD ஆகவோ அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த செய்தியை இந்த வலைத் தளத்தை பார்க்காத அனைவருக்கும்  தெரிவிக்கவும்.

Com. P.Kumar,
Secretary, AIPEU Gr ‘C’
Arakonam Divl  Br,
Arakonam 631 001.

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்


ஞாலத்தில் மாணப் பெரிது"

Monday, November 25, 2013

NFPE க்கு வயது 60 துவங்குகிறது 24.11.2013 திருப்பூரில் வைரவிழாக் கொண்டாட்டம்


 திருப்பூர் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களான அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE) கோட்ட சங்கங்களின் சார்பில்  N F P E சம்மேளன வைர விழா கொண்டாட்டம்  24.11.2013  அன்று திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் கொண்டாடப்பட்டது. 

தோழர் P.K.ராமசாமி ,தலைமை அஞ்சல் அதிகாரி அவர்கள் கொடியேற்றி விழாவை தொடக்கியதும் வீரமுழக்கங்கள் விண்ணதிர முழங்கியது.
தோழர்கள் K.S. ரவீந்திரன். தோழர் P.அம்மாசியப்பன்,தோழர் .R .கிட்டுசாமி  ஆகியோரின் கூட்டு தலைமையில் விழா தொடங்கியது .  கோட்ட செயலரும் மாநில  அமைப்பு செயலருமான தோழர் A.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். 

 மாநில உதவி செயலரும்,கோவை மேற்கு மண்டலச் 

செயலருமான தோழர் C.சஞ்சீவி  அவர்கள் வாழ்த்துரை 

வழங்க  மத்திய அரசு மகா ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில 

பொது செயலர்


                 தோழர் M.துரைபாண்டியன் அவர்கள் 

"ஏழாவது ஊதியக்குழு, புதிய பென்ஷன் மசோதா, நமது கடமை " 
என்ற தலைப்பில் மிக அற்புதமான உரையாற்றினார் .  தோழர் 
V.தர்மலிங்கம் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது. ஏறக்குறைய 100 தோழர்/தோழியர் கலந்து  கொண்டது விழாவின் மணிமகுடம். 





Thursday, November 21, 2013

JCM (DC) meeting to discuss new subjects.

அஞ்சல் துறை கூட்டு ஆலோசனைக்குழு  உறுப்பினராக(ஊழியர் தரப்பு ) 
நமது கோட்ட தோழர் N . சுப்ரமணியன் ( Deputy General Secretary P 3) நியமிக்கப் பட்டுள்ளார் .  

27/11/2013 அன்று     JCM  கூட்டம் நடைபெற உள்ளது 


No.06-02/2013-SR
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
                                                                (S.R. Section)                                                18/11/2013

Subject:     Notice for the JCM (DC) meeting to discuss new subjects.

     The meeting of JCM (DC) to discuss the new subjects will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) in G.P. Roy Committee Room, 2nd Floor, Dak Bhavan, New Delhi.


     Please make it convenient to attend the meeting.  Subjects for discussion in the meeting were circulated vide S.R. Section’s letter of even number dated 23rd July, 2013.  The meeting will be followed by lunch.

                                                                                                                        ( Arun Malik )
                                                                                                                          Director(SR)
Chair person : Secretary(Posts)

OFFICIAL SIDE


STAFF SIDE

 Member(O)
 Member(P)
 Member(Tech)
 Member(PLI)
 Member (Plg)
Member(HRD)
CGM(MB)
CGM(PLI)
CGM(BD&MD)
JS&FA.Secretary(PSB)
DDG(P)
DDG(Estt)
DDG(R&P)
DDG(Estates&MM)
DDG(PAF)
DDG(Vig.)
DDG(PO&CP)
DDG(FS)
DDG(Technology) 
OSD to Secretary(Posts)
1.      Shri  M. Krishnan
2.      Shri   D. Theagarajan
3.      Shri  Giri Raj Singh
4.      Shri  Ishwar Singh Dabas
5.      Shri  D. Kishan Rao
6.      Shri  T.N. Rahate
7.      Shri  P. Suresh
8.      Shri  Pranab Bhattacharjee
9.      Shri T. Satyanarayana
10.    Shri  R.N. Parashar
11.    Shri  N. Subramanian
12.    Shri  C.B. Surve
13.    Shri S.K. Humayun
14.    Shri  N. Ramappa






Tuesday, November 12, 2013

One more option given to GDS to enroll in Service Discharge Benefit Scheme (SDBS) – Directorate order:



ஊரக அஞ்சல் ஊழியர்கள்  கவனத்திற்கு 


The Service Discharge Benefit Scheme (SDBS) for GDS came into effect from 1st April, 2011  (vide OM No.6-11/2009-PE-II dated 01-04-2011). It is noticed that only 70% of GDS has opted the Scheme.
              On request of Service Unions / Federations, it is now considered to give one more option to the remained willing GDS; the Directorate issued guidelines / instructions  on the subject on two items :
(i)   Extend one extra option for enrollment:
= GDS having less than 3years of service as on 01-01-2014 are not eligible.
= Enrolment must be made before 31st January 2014
(Govt. contribution shall be commenced from that month only)

(ii) Personal subscription / contribution towards this scheme:
= It is now allowed to made personal contribution / subscription from GDS towards the Scheme.
= Same rate of Rs.200/- permonth can be made as personal subscription for the Scheme with effect from the month of October 2013.

= The personal contribution / subscription can be deducted from the monthly TRCA on application to the concerned DDO.

The interested GDS can now enroll themselves in the Scheme.



NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS FROM 24.11.2013 TO 24.11.2014


National Level inaugural Function of one year Long celebrations will be held at MP’s Hall, New Delhi (Near NFPE Office, North Avenue) on 24th November 2013 at 4 PM. Distinguished personalities, Leaders of Central Trade Unions, National Leaders of Confederation, NFPE and other fraternal organisations will participate in the function. All are requested to grace the occasion with their presence.


M. Krishnan
Secretary General
NFPE

INCLUSION OF GDS UNDER TEH PURVIEW OF 7th CPC Response from Prime Minister's Office to the Letter of NFPE & FNPO

                    நமது முயற்சி வீண் போகாது 



Saturday, November 9, 2013

Friday, November 8, 2013

பங்கேற்போம் பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் ;





 பங்கேற்போம் பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் ; 
 அணி திரள்வோம் ஓரணியில் : வென்றிடுவோம் GDS கோரிக்கைகளை :
வஞ்சிக்கப்பட்ட ஊரக அஞ்சல் ஊழியர்களின் போர்வாள் NFPE :
முரசு ஒலிக்கிறது ; புறப்படு : 

GDS குரல் NFPE யின் பெருங்குரலால் இன்று CONFEDERATION தாண்டி RAILWAY உள்ளிட்ட அனைத்து மத்திய  அரசு ஊழியர்களின்ஒருமித்த  குரலாய் ஒலிக்கிறது.

நமது  திருப்பூர் கோட்டத் திலிருந்து 40 க்கும் மேற்பட்டோர் டெல்லி ப் பேரணியில் பங்கேற்க உள்ளனர் 



SANSAD MARCH




congratulations-desi-glitters-15






புதிதாக இந்த இலாக்காவில் இணைய உள்ள உங்களை நாங்கள் வருக! வருக! என்று இரு கரம் நீட்டி வரவேற்கிறோம் ! நீங்கள் இணைய வேண்டிய சங்கம் AIPEU GROUP 'C' சங்கம் !

அன்புத் தோழர்களே !  எழுத்தர்  தேர்வின் முடிவுகள் தமிழக அஞ்சல் வட்டத்தில் இன்று வெளியிடப்பட்டது . கீழே காணும்    இணைப்பை ' கிளிக் " செய்து  தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.


புதிதாக  இந்த இலாக்காவில் இணைய உள்ள  உங்களை 
 நாங்கள் வருக! வருக! என்று இரு கரம் நீட்டி வரவேற்கிறோம் ! 

உங்கள் எதிர்காலத்திற்கு , உங்கள் உரிமைகளுக்கு , உங்களுக்காக நீங்களே எங்களுடன் இணைந்து குரல் கொடுத்திட  நீங்கள் இணைய வேண்டிய சங்கம் AIPEU   GROUP 'C'  சங்கம் !

அன்புடன் 
A. ராஜேந்திரன், 
 செயலர், P 3  திருப்பூர் 
&
N .சுப்ரமணியன்  DGS  AIPEU Gr C  NEWDELHI