Tuesday, April 30, 2013

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அறைகூவல் படி நமது NFPE அஞ்சல் மூன்று ,நான்கு ,GDS சங்கங்கள் கூட்டாக 29/4/2013 அன்று மாலை   திருப்பூர் தலைமை அஞ்சலக வாயிலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  நடத்தியது .அஞ்சல் மூன்று அகிலஇந்திய துணை ப் பொதுசெயலர் தோழர் NS சிறப்புரை நிகழ்த்தினார் . 
தலைவர் சந்திரசேகர் ஆற்றும்  வீர உரை 

அன்பிற்குரிய Com . C .சந்திரசேகர்

NFPE சம்மேளனத்தின் செயல் தலைவர்   நமது அன்பிற்குரிய Com . C .சந்திரசேகர்(Kovai Dn) இன்று (30/4/2013) அரசுப்பணியிலிருந்து  ஓய்வு பெறுகிறார் . மேலும் மேட்டுப்பாளை யம் அஞ்சல் மூன்று  முன்னாள் கிளைத் தலைவர் Com N .M .மாணிக்கம் Postmaster , Mettupalayam அவர்களும் , ஈரோடு கோட்ட சென்னிமலை  அஞ்சலகத் தலைவர் Com .A .குழந்தைவேலு ( EX -Vice president ,P 3 Tirupur ) அவர்களும் இன்று  ஓய்வு பெறுகிறார்கள் . 
எல்லா நலமும் பெற்றுத் திகழ வாழ்த்துகிறோம் 

--------  திருப்பூர் ,மேட்டுபாளையம் ,தாராபுரம் 
P 3,P 4, GDS (NFPE ) 

மேட்டுபாளையம் கிளை மாநாடு

மேட்டுபாளையம்  கிளை மாநாடு  21/4/2013 அன்று சிறப்புடன் நடந்தது 





Monday, April 29, 2013

சொக்கத்தங்கமே சந்துரு

 அன்பிற்குரிய அண்ணலே ,
 அஞ்சாத சிங்கமே ,
சொக்கத்தங்கமே  சந்துரு !!

அரசுப்பணிக்குத் தான் இன்று (30/4/13) முதல் ஓய்வு !!!
சங்கப்பணிக்கல்ல ,
நின் தடத்தில் வழி நடப்போம் !

தலைவர் காட்டிய திசை வழியில் தொடர்ந்து செல்வோம் 







Friday, April 26, 2013

36 வது திருப்பூர் அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு

36 வது  திருப்பூர் அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு வருகிற 12/5/2013 ஞாயிற்று க்கிழமை காலை 10 மணிக்கு  திருப்பூர் அஞ்சலக வளாகத்தில் நிகழ உள்ளது . அனைவரும்  வருக ; அழைப்பிதழ் விரைவில் .

மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று கிளை மாநாடு

மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று  கிளை மாநாடு கடந்த 21/4/2013
 அன்று சிறப்புடன்  நிகழ்ந்தேறியது  . தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  தோழர் J.R . ,   NFPE சம்மேளன செயல் தலைவர் தோழர் 
 C .சந்திரசேகர் ,  P 3 அகிலஇந்திய துணை ப் பொதுசெயலர் தோழர் NS , 
P 3 மாநில உதவி தலைவர் தோழர் .நேதாஜி சுபாஷ் , P 3 மாநிலஅமைப்புச் செயலர் தோழர் .பச்சியப்பன் , NFPE -GDS  அகிலஇந்திய துணை ப் பொதுசெயலர் தோழர்.தன்ராஜ் ,NFPE -GDS மண்டலச் செயலர் தோழர் மகாலிங்கம் ,நீலகிரி கோட்டசெயலர் தோழர் சேகர் , திருப்பூர் P 3 கோட்டசெயலர் (பொறுப்பு) தோழர் .A .ராஜேந்திரன் II ,       திருப்பூர் P 3 தலைவர் தோழர் K .S .ரவீந்திரன், திருப்பூர் P4 கோட்டசெயலர் தோழர் 
 V .தர்மலிங்கம் ,கோபி P 3 கிளை ச் செயலர் தோழர்.கார்த்திகேயன்  மற்றும் நாமக்கல் , கோவை  கோட்டங்களிலுமிருந்தும்  தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . தோழர் NS அவர்களுக்கு பாராட்டு விழாவும் சிறப்புடன் நடைபெற்றது .

மாநாட்டில்  மேட்டுபாளையம் அஞ்சல் மூன்று  கிளை நிர்வாகிகளாக கீழ் காண்  தோழர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க ப் பட்டனர் .

தலைவராக தோழர். சுந்தரம் , செயலராக தோழர்.K .செலவராஜ் , நிதிச்செயலராக தோழர். வேணுகோபால் ஆகியோர்  சிறப்புடன் செயல்பட உள்ளனர் . 

Friday, April 19, 2013

சொன்னதொன்று ; செய்தது வேறொன்று .

      சொன்னதொன்று ; செய்தது வேறொன்று . 

   HSG I  பதவி களை  ஏற்கனேவே உள்ள RECRUITMENT RULE படி நிரப்பிட 

  நமது  துறை ஆணை வெளியிட்டுள்ளது . இத்தனை வருடங்களாக 
புது விதி வகுப்பதாகக் கூறி தாமதப்படுத்தி எத்துனை சீனியர்  PA தோழர்கள் பதவிஉயர்வு இல்லாமலேயே ஓய்வு பெறச் செய்த அஞ்சல் துறை நிர்வாகம்  POSTMASTER GRADE  I ,II  INITIAL CONSTITUTION ல் வந்த தோழர்களையும்  ஏமாற்றி விட்டது .நமது  தொழிற் சங்கம் தரும் ஆலோசனைகளை முதலிலேயே கேட்காமல் வேறு வழி யின்றி கடைசியில் தாமதமாய் எடுத்த முடிவால்   பரிதவித்து நிற்கும் அனைத்து 
தோழர்களின் பாதிப்புகளையும் நமது NFPE  
தீவிரமாய் முன்னின்று களையும் .




                     DA HIKE

Union Cabinet today approved the proposal to increase
 
dearness allowance (DA) to 80 per cent, from existing  

72 per cent, benefiting about 50 lakh employees and 30  

lakh pensioners of the central government.

The hike would be effective from January 1, 2013 and 

the employees and pensioners will be entitled to 

arrears.

Saturday, April 13, 2013








(PUBLISHED IN PART I SECTION 1 OF GAZETTE OF INDIA)

F.NO. 5(1)-B(PD)/2013

Government of India
Ministry of Finance
(Department of Economic Affairs)
New Delhi, the 8th April, 2013

RESOLUTION


 It is announced for general information that during the year 2013-2014, accumulations
at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall
carry interest at the rate of 8.7% (Eight point seven per cent) per annum. This rate will be in
force during the financial year beginning on 1.4.2013. The funds concerned are:—

1. The General Provident Fund (Central Services).
2. The Contributory Provident Fund (India).
3. The All India Services Provident Fund.
4. The State Railway Provident Fund.
5. The General Provident Fund (Defence Services).
6. The Indian Ordnance Department Provident Fund.
7. The Indian Ordnance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund.
9. The Defence Services Officers Provident Fund.
10. The Armed Forces Personnel Provident Fund.
2. Ordered that the Resolution be published in Gazette of India.
(Peeyush Kumar)
Director (Budget)




INTEREST RATE 
FOR GPF HAS BEEN
 CHANGED TO 8.7%

Wednesday, April 10, 2013

36 வது தமிழ் மாநில மாநாடு - குடந்தையிலே



36 வது தமிழ் மாநில மாநாடு - குடந்தையிலே -

சிறப்புடன் நிகழ்த்திட அனைவரும் 

உழைப்போம் !








Tuesday, April 2, 2013

                                         
                                                          கண்ணீர் அஞ்சலி 


நம் அன்புத் தோழர் , தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மாநில உதவி நிதிச் செயலர்  
தோழர் . C .P . திலகேந்திரன் அவர்கள்  
மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக  இரண்டு மாதங்களாய்  நினைவு தவறி இருந்தார். இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப் பட்டும் பலனின்றி  இன்று அதிகாலை  உயிர் துறந்தார். 

அனைவரிடமும்  இனிமையாகப் பழகக் கூடிய ஒரு சிறந்த பண்பாளர் . 
ஓடிச் சென்று அனைவருக்கும் உதவக்கூடிய  சுறுசுறுப்பான செயல் வீரர். 

தொழிலாளர் பிரச்சினையை தனது சொந்தப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அதைத் தீர்த்து வைப்பதில் அதீத ஈடுபாடு காட்டக் கூடியவர் .பிரச்சினை தீரவில்லையெனில்  அது குறித்து அதிகம்  கவலை கொண்டு இருப்பார்.  இப்படி ஒரு பொது நோக்காளரை  நாம் இழந்து விட்டோம். குறிப்பாக தமிழக அஞ்சல் மூன்று சங்கம்  இழந்து விட்டது.  இது நமது இயக்கத்திற்கே  பேரிழப்பாகும். 

அவரது பிரிவால் வாடும் அவரது துணைவியார், பிள்ளைகள்  மற்றும் குடும்பத்தாருக்கு நம் மாநிலச் சங்கத்தின் ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் .  அவரது ஆன்மா  சாந்தியடைய  நமது இதய பூர்வமான வேண்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் தம் பணி  நம் நினைவில் என்றும்  நீங்காது இடம் பெற்றிருக்கும்.!