Friday, August 1, 2014

தோழர். K. நாராயணன் அவர்களை திருப்பூர் NFPE வாழ்த்துகிறது

நம்முடைய அஞ்சல்மூன்று சங்கத்தின் தென்மண்டல முன்னாள்செயலர் தோழர். K. நாராயணன் அவர்கள் (தல்லாகுளம் HO )31/07/2014 அன்று அரசுப் பணி நிறைவு

WISHING HIM A HAPPY RETIRED LIFE !

    நம்முடைய அஞ்சல்மூன்று சங்கத்தின் தென்மண்டல முன்னாள் செயலர் தோழர்  K. நாராயணன் அவர்கள் (9894822912) PRI(P), தல்லாகுளம் HO  அரசுப் பணி நிறைவுபெற்றார் . அவர்தம் காலத்தில் தென் மண்டலத்தில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப் பட்டன என்பது தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் தெரியும். முழுமையான தொழிற் சங்க ஈடுபாடு, சுறுசுறுப்பு , எந்த செயலையும் உடனே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் , அனைத்து உயர் மட்ட தலைவர்களுடனும் நேரடி அறிமுகம் , சங்கத்தில் பிரச்சினைகள் இருந்த காலத்திலும் துவளாமல் செயல்பாடு. இவையே தோழர் நாராயணின் சிறப்புக்கள் ஆகும். அவர்தம் பணி நிறைவுக் காலம் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக அமைந்திட நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

இவருக்கான மதுரை கோட்டச் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள பாராட்டு விழா எதிர்வரும் 15.08.2014 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.

No comments :

Post a Comment