Tuesday, April 8, 2014

DIAMOND JUBILEE CONVENTION AT AMBASAMUDRAM ADDRESSED BY OUR GENERAL SECRETARY


அம்பை கிளையில் பொதுச் செயலர் கலந்து கொண்ட  
சிறப்பு மிக்க  கருத்தரங்கம் மற்றும்  பணி  நிறைவுப் பாராட்டு விழா !

கடந்த 06.04.2014 அன்று  திருநெல்வேலி கோட்டம் அம்பாசமுத்திரம் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு  மற்றும் GDS  கிளைகளின் சார்பில் அரசு பணி  நிறைவு பெற்ற தோழர். அம்பை தியாகராஜன் , தோழர். கோவில்பட்டி சுப்பைய்யா  ஆகிய தோழர்களுக்கு  பாராட்டு விழாவும் ,  நமது சம்மேளன வைர விழா நிகழ்வை ஒட்டி  நமது  சம்மேளன மா பொதுச் செயலர்  தோழர். M . கிருஷ்ணன் அவர்கள்  கலந்து கொண்ட  ஒரு மாபெரும்  கருத்தரங்கு நிகழ்வும்  அம்பையில்  வெகு சிறப்பாக நடைபெற்றது . 

கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு  பல்வேறு தலைப்புகளில் தோழர். கிருஷ்ணன் அவர்களும்,  அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும், அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . R . அவர்களும்  சிறப்பான உரையினை  அளித்தனர். 

 கருத்தரங்கு நிகழ்விற்கு  நமது மாநிலச் சங்கத்தின் முன்னாள் அமைப்புச் செயலர் தோழர். M . செல்வகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.  அம்பை அஞ்சல் மூன்று கிளையின் செயலர் தோழர். வேல்முருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  

பணி  நிறைவு பாராட்டில்  அஞ்சல் நான்கின் மாநிலத் தலைவர் தோழர் கண்ணன் அவர்களும் AIPEU  GDS  NFPE  இன் மாநிலத் தலைவர் தோழர். ராமராஜ் அவர்களும் , அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்  தோழர். R .V . தியாகராஜபாண்டியன் அவர்களும் , மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப் ராஜ் அவர்களும்  கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினர். 

தோழர் கிருஷ்ணன் அவர்களின் 2 மணி நேர கருத்தரங்கு  உரை  வெகு சிறப்பாக அமைந்திருந்தது . அதனை  நமது மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீவி  அவர்கள்  தமிழில் மொழி பெயர்த்து  அளித்தது  உரையின் சிறப்பை மேலும் செழுமைப் படுத்துவதாக அமைந்தது .

இறுதியாக  நமது பொதுச் செயலரிடம் இலாக்கா பிரச்சினைகளில் விளக்கம் கேட்டு 60 க்கும் மேற்பட்ட தோழர்கள்  சீட்டு அளித்தனர் . அனைத்திற்கும் தமிழில்  தெளிவாக  பதில் அளித்திட  நமது  பொதுச் செயலர் அவர்கள்  நம் மாநிலச் செயலரைப் பணித்தார்.  நம்முடைய  மாநிலச் செயலரும் நேரமில்லாதபோதும், அனைத்து  கேள்விகளுக்கும் நிதானமாக பதில் அளித்த விதம்  பொதுச் செயலரால் பாராட்டப் பட்டது.

கருத்தரங்கு நிகழ்வில்  சுமார் 450 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டது  மிகச் சிறப்பு சேர்த்தது.  இத்தனை பெரிய அளவில் , அருமையான மதிய உணவு உபசரிப்புடன்  விழா நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்த அம்பை கிளையின் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு  மற்றும் மற்றும் GDS  தோழர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த  பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !.

நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு :-








திருநெல்வேலி அஞ்சல்  மூன்று  மாநாட்டில்  நமது துணைப் பொது செயலர்   Com .N S  , மேற்கு (கோவை ) மண்டல செயலர் Com.சஞ்சீவி  , மேட்டுபாளையம் கிளை செயலர் Com.K .செல்வராஜ் மேட்டுபாளையம் கிளை GDS NFPE  செயலர் Com.ராஜகோபால் தென் மண்டல செயலர்  Com.தியாகராஜ பாண்டியன் முன்னாள் தென் மண்டல செயலர்  Com.நாராயணன்  ஆகியோர் கலந்து கொண்டனர் . தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவி மாநில செயலர் தோழர் .ஜேக்கப் ராஜ்  மீண்டும்  திருநெல்வேலி அஞ்சல்  மூன்றின் கோட்டசெயலராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவருக்கு திருப்பூர் , தாராபுரம், மேட்டுப்பாளையம் அஞ்சல்  மூன்றின் நல் வாழ்த்துக்கள் 















No comments :

Post a Comment