Monday, November 25, 2013

NFPE க்கு வயது 60 துவங்குகிறது 24.11.2013 திருப்பூரில் வைரவிழாக் கொண்டாட்டம்


 திருப்பூர் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களான அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE) கோட்ட சங்கங்களின் சார்பில்  N F P E சம்மேளன வைர விழா கொண்டாட்டம்  24.11.2013  அன்று திருப்பூர் தலைமை அஞ்சலகத்தில் கொண்டாடப்பட்டது. 

தோழர் P.K.ராமசாமி ,தலைமை அஞ்சல் அதிகாரி அவர்கள் கொடியேற்றி விழாவை தொடக்கியதும் வீரமுழக்கங்கள் விண்ணதிர முழங்கியது.
தோழர்கள் K.S. ரவீந்திரன். தோழர் P.அம்மாசியப்பன்,தோழர் .R .கிட்டுசாமி  ஆகியோரின் கூட்டு தலைமையில் விழா தொடங்கியது .  கோட்ட செயலரும் மாநில  அமைப்பு செயலருமான தோழர் A.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். 

 மாநில உதவி செயலரும்,கோவை மேற்கு மண்டலச் 

செயலருமான தோழர் C.சஞ்சீவி  அவர்கள் வாழ்த்துரை 

வழங்க  மத்திய அரசு மகா ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில 

பொது செயலர்


                 தோழர் M.துரைபாண்டியன் அவர்கள் 

"ஏழாவது ஊதியக்குழு, புதிய பென்ஷன் மசோதா, நமது கடமை " 
என்ற தலைப்பில் மிக அற்புதமான உரையாற்றினார் .  தோழர் 
V.தர்மலிங்கம் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது. ஏறக்குறைய 100 தோழர்/தோழியர் கலந்து  கொண்டது விழாவின் மணிமகுடம். 





No comments :

Post a Comment